உள்ளூர் செய்திகள்

இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

Published On 2022-11-01 09:39 GMT   |   Update On 2022-11-01 09:39 GMT
  • இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு நடந்தது
  • அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்

அரியலூர்

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜ் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சங்கர், முன்னாள் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் மா.மு.சிவகுமார், பொதுக் குழு உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேகர், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், கர்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து செலுத்தினர். இதே போல், புங்கங்குழி ஆதனூரிலுள்ள இந்திரா காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News