உள்ளூர் செய்திகள்

அரசு நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

Published On 2023-03-18 08:29 GMT   |   Update On 2023-03-18 08:29 GMT
  • பாளையபாடி கிராமத்தில் 10ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்டதால் விவசாயிகள் உற்சாகம்
  • திறப்பு விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்


திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையப்பாடி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பாளையபாடி பஸ் நிலையம் அருகில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது .விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.முன்னாள் பால்வளத்துறை தலைவர் பாலை திருநாவுக்கரசு அரசு அதிகாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை அமரமூர்த்தி கலந்து கொண்டு இந்த நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், மாரியப்பன், பாளை பழனிச்சாமி, ரவிசங்கர், கோவிந்தராஜ். சுபாஷ், பழனியப்பன் , மணியன், கருப்பையன், வினோத் ராஜ் மற்றும் கிராம பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் ஸ்வீட் காரம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது




Tags:    

Similar News