உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக கடைகளுக்கு விடுமுறை

Published On 2022-08-12 09:49 GMT   |   Update On 2022-08-12 09:49 GMT
  • டாஸ்மாக கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
  • சுதந்திர தின விழாவை முன்னிட்டு

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்து–ள்ளதாவது:

அரியலூர் மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடை–கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடம் அனைத்திற்கும்,

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2022 (திங்கட்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர்தி–னமாக விடுமுறை அறிவிக்க–ப்படுகிறது.

மீறி மதுபான சில்லறை விற்பனை கடைகளோ மதுபானக்கூடங்களோ செயல்பாட்டால் கடும் நடவடிக்கை மேற்கொ–ள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடு–த்து–ள்ளார்.

Tags:    

Similar News