உள்ளூர் செய்திகள்
அரியலூரில் வருகிற 1-ந்தேதி கிராம சபை கூட்டம்
- அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 01.11.2022 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது
- சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் 01.11.2022 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.இதில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருட்கள் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் விவாதி க்கப்படும்.
இக்கிராம சபை கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து த்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.