- சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
உடையார்பாளையம்,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா சிறுவஞ்சிப்பட்டு மேட்டுத்தெருவில் வசித்து வரும் ரமாமணி - சேட்டு தம்பதியின் மகள் சுரேகா(வயது 21). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ேபஸ் புக் மூலம் பழக்கமான பொன்பரப்பி, கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜித் என்பவரை காதலித்து திருமணம் செய்து ெகாண்டார். இவர்களுக்கு தன்சிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுரேகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரமாமணி கூறுகையில், மருமகனும்,மகளும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மகளுக்கு பதினோரு பவுன் நகை செய்துள்ளேன். கடந்த வாரம் மருமகன் அஜித் போன் மூலம் உங்கள் மகள் செய்வது சரியில்லை எனக் கூறினார். அதன் பிறகு எனது மகள் தூக்கு மாட்டி இறந்துவிட்டதாக எனது மூத்த மகள் சரண்யாவிற்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர் என்று கூறினார். இது குறித்து அவர் செந்துறை காவல் நிலையத்தில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.