உள்ளூர் செய்திகள்
- பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- வீட்டில் தனியாக இருந்தபோது நடந்த விபரீதம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உத்திரக்குடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மஞ்சுளா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.