உள்ளூர் செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-07-30 09:35 GMT   |   Update On 2022-07-30 09:35 GMT
  • பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த சுருளிராஜனின் மனைவி பிரியா(வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சுருளிராஜன், பிரியாவை திட்டியுள்ளார். இதில் கோபித்துக் கொண்டு அதே கிராமத்தில் இருந்த அவரது தாய் வீட்டிற்கு பிரியா சென்றுவிட்டார். அங்கு அவரது தாய் கடைக்கு சென்றிருந்த நேரத்தில் புடவையால் பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த திருமானூர் போலீசார் அங்கு சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News