உள்ளூர் செய்திகள்

மகன் திட்டியதால் தந்தை தற்கொலை

Published On 2023-09-16 14:04 IST   |   Update On 2023-09-16 14:04:00 IST
  • அரியலூரில் மகன் திட்டியதால் தந்தை தற்கொலை செய்து கொண்டார்
  • கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

. அரியலூர்,

அரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அவரது மகன் ஏன் தினமும் குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்ததனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News