உள்ளூர் செய்திகள்

அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-06-23 10:22 GMT   |   Update On 2022-06-23 10:22 GMT
  • அரியலூரில், விவசாயிகளுக்கு ஜூன் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
  • கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது.

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜூன் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.

மேலும், கொரோனா காலமாக இருப்பதால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும்போது முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். மேலும் கூட்டத்தில் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News