உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-09-08 15:02 IST   |   Update On 2023-09-08 15:02:00 IST
  • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
  • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாப்பாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது58), விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்கோளாறால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த செல்வராஜ் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News