உள்ளூர் செய்திகள்

297 பேருக்கு பணி நியமன சான்றிதழ்

Published On 2023-09-17 09:01 GMT   |   Update On 2023-09-17 09:01 GMT
  • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 297 பேருக்கு பணி நியமன சான்றிதழ் வழங்கப்பட்டது
  • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

  அரியலூர், 

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவ ட்டம், செந்துறை அரசு பெண்கள் மே ல்நிலைப் பள்ளியில், மாவ ட்ட நிர்வாகம் ,மாவட்ட வே லைவாய்ப்பு மற்றும் தொ ழில்நெறி வழிகாட்டல் மை யம் சார்பில் நடைபெற்ற தனியார் துறை வே லைவாய்ப்பு முகாமில் 297 பேருக்கு பணி நியமனச் சா ன்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.முகாமுக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். அரி யலூர் எம்.எல்.ஏ கு.சின்ன ப்பா முன்னிலை வகித்தார். இந்த வேலைவாய்ப்பு முகா மை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்கி வைத்தார். பின்னர் பணி நியமனச் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில்,இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு 102 நிறுவனங்கள் வந்திரு க்கின்றன. முகா முக்கு வந்த 2,063 பேர் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து ள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வே லைவாய்ப்பு வழங்க முடியா து. முகாமில் கலந்து கொ ண்டவர்களில் 297 நபர்க ளுக்கு வேலை வாய்ப்பு க்கான ஆணை வழங்கப்ப டுகிறது. மேலும் 512 நபர்கள் 2-ம் கட்ட நேர்முக தேர்வு க்குகு தேர்வாகி யுள்ளனர். மீதம் இருப்பவர்கள் வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட தேவையில்லை. அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெறுகின்ற இதே போன்ற வேலைவாய்ப்பு முகாம்க ளில் நாம் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள நம்மை தயார் செய்ய வே ண்டும. இந்த அனுபவத்தின் மூ லமாக அடுத்த நேர்கா ணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளி க்கும் வகையில் நாம் நம்மை தயார் கொள்ள வேண்டும். வரும் ஜனவரி மாதத்தில் மாபெரும் தொழில் முத லீட்டு மாநாடு நடைபெற இரு க்கின்றது. பல நாட்டைச் சேர்ந்த தொழில் நிறு வனங்களை பங்கேற்க செய்து தமிழகத்தில் வேலை வா ய்ப்பு பெறுகின்ற வகை யில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். குன்னம் தொகுதியில் சிப்காட்டில் தைவான் நாட்டைச் சேர்ந்த கா லனி தயாரிக்கும் தொ ழிற்சாலை வரவுள்ளது. அ தனையொட்டி 5,000 முதல் 10,000 வேலை வாய்ப்பு பணிகள் கிடைக்க உள்ளது என்றார். இம்முகாமில் ஊ ரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மா வட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.க லைச்செ ல்வன், செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மூ.வினோ த்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News