உள்ளூர் செய்திகள்

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Published On 2023-03-17 12:22 IST   |   Update On 2023-03-17 12:22:00 IST
  • வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்
  • நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகளில் பொதுமக்களிடம் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, காலி மனை வரி, தொழில்வரி, வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் உள்ளிட்ட வரிகள் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 5 கோடி ரூபாய் வரி வசூல் பாக்கி உள்ள நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் நகராட்சி ஆணையர், மேலாளர், பொறியாளர் மற்றும் பணியாளர்கள் சேர்ந்து அதிரடியாக வரி வசூலில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் சுமார் 1.5 கோடி ரூபாய் வசூல் ஆன நிலையில் மீதம் 3.5 கோடி பாக்கி உள்ளது.இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக நகராட்சிக்கு வர வேண்டிய குடிநீர் வரி சுமார் 25 லட்சம் பாக்கி வர வேண்டி உள்ளதால். ஜெயங்கொண்டம் அண்ணா சிலை பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளில் உடனடியாக வரி செலுத்தாத பட்சத்தில் குடிநீர் இணைப்புகளை துண்டித்து அதிரடி வரி வசூல் செய்து வருகின்றனர்.இதேபோல் 87 லட்சத்துக்கு மேல் சொத்து வரியும், 22 லட்சம் தொழில் வரியும், காலி மனை வரி விதிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் இது வரை வரி செலுத்தப்படவில்லை.

மேலும் வரி இல்லா இனம், குத்தகை இனம் செலுத்த வேண்டியவற்றை தற்பொழுது நகராட்சி நிர்வாகம் அதிரடியாக தீவிர வசூலில் இறங்கி உள்ளனர்.மேலும் இது பற்றி நகராட்சி ஆணையர் கூறும்போது வரி செலுத்த தவறுறோர்கள் மீது ஜப்தி நடவடிக்கை குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News