உள்ளூர் செய்திகள்

வாலிபரை கத்தியால் கிழித்த திராவிடர் கழக பிரமுகர் கைது

Published On 2023-06-28 12:11 IST   |   Update On 2023-06-28 12:11:00 IST
  • வாலிபரை கத்தியால் கிழித்த திராவிடர் கழக பிரமுகர் கைது செய்யபட்டார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 49). திராவிட கழக ஒன்றிய அமைப்பாளர் ஆன இவர் செந்துறை அண்ணா சிலை எதிரே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இந்த பகுதியில் தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு பள்ளம் தோண்டிய போது கட்டிடத்தின் கீழே இருந்த செப்டிக் டேங்க் உடைந்து விட்டது. இந்தநிலையில் இவர் கடையில் இருந்த பாத்ரூமின் பைப்லைனில் இருந்து வந்த கழிவு நீரை இளங்கோவன் திறந்து விட்டார்.

இவை அருகே கடை நடத்தி வரும் ராஜேந்திரன் மகன்கள் கடை பகுதியில் புகுந்துள்ளது. இதனைக் கண்ட ராஜேந்திரன் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜேந்திரன் மகன் பிரசாத் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் இளங்கோவனிடம் ஏன் கழிவு நீரை திறந்து விட்டுவிட்டு, எனது தந்தையிடம் தகராறு செய்தாய் என்று கேட்டு உள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த இளங்கோவன் ஏற்கனவே கையில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு கட்டு போட்டு இருந்த அனிதாவை தாக்கி–யதோடு தன் கையில் வைத்திருந்த பேனா கத்தி–யால் பிரசாத்தை சரமாரி–யாக கிழித்துள்ளார்.

இதனால் அவருக்கு 20 இடங்க–ளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீ–சார் விரைந்து சென்று சண்டையை விலக்கி விட்டு பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிர–சாத் கொடுத்த புகாரின் பேரில் இளங்கோ–வனை கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோன்று இளங்கோ–வன் கொடுத்த புகாரின் பேரில் பிரசாத் அவரது அண்ணன் வினோத்குமார் மற்றும் இருவரது மனைவி–கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News