உள்ளூர் செய்திகள்

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2023-05-30 05:08 GMT   |   Update On 2023-05-30 05:08 GMT
  • அரியலூர் வாழைக்குறிச்சியில் தீமிதி திருவிழா நடைபெற்றது
  • ஏராளமான பக்தர்கள் பூங்கரகம், அக்னிகரகம் எடுத்து வந்தனர்

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. 19-ந் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்று, மகா மாரியம்மன், திரவுபதி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மன், திரவுபதி அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவில் மகா மாரியம்மன், திரவுபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று காலை கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிக்குப் பின்னர் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்றது.

Tags:    

Similar News