உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-25 11:44 IST   |   Update On 2023-07-25 11:44:00 IST
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தல்

அரியலூர், 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் பேணியில் ஈடுபட்டனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வே ண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியி டங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.ஐ செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி இயக்கு பவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள், வன பாதுகாப்பு ஊழி யர்கள், கல்வி த்துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் அனை வரையும் நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணைகள் 115, 139 மற்றும் 152 ஐ உடனடியாக ரத்து செய்திட வேண்டும். சாலைப்ப ணியாள ர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டது.அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் கோ ரிக்கை விளக்கவு ரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட பொருளாளர் காமராஜ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி இளங்கோவன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கநிர்வாகி பழனிவேல், எம்.ஆர்.ஐ செவிலியர்கள் சங்க நிர்வாகி ராகவன் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.பின்னர் அனைவரும், அங்கிருந்து பல்துறை வளாகம் வரை பேரணியாகச் சென்றனர்.

Tags:    

Similar News