உள்ளூர் செய்திகள்

குருவாடி கிராம குளத்தில் முதலை

Published On 2023-04-10 12:15 IST   |   Update On 2023-04-10 12:15:00 IST
  • மீன் பிடிக்க நீர் இறைத்தபோது வெளியே வந்தது
  • தீயணைப்பு வீரர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி அருகே உள்ள குருவாடி கிராமத்தில் குளத்தில் மீன் பிடிக்க நீர் இறைத்த போது முதலை சிக்கியது.உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மயக்க ஊசி செலுத்தி முதலையை பிடித்து கட்டப்பட்டுள்ளது.இதனை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர்.கொள்ளிம் ஆற்றில் இருந்து குளத்திற்கு முதலை வந்திருக்கலாம் என அந்த பகுதி நம்புகிறார்கள். 

Tags:    

Similar News