அரியலூரில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
- அரியலூரில் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்
அரியலூர்,
அமைப்புச்சாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள தொழிலாளர் நல வாரியம் முன்பு சிஐடியு-வினர்ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தொழிலாளர்களுக்கும்வா ரியம் மூலம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து பெண்தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து நல வாரிய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
கலெக்டர் தலைமையில் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் அமைப்பு சாரா வாரியங்களுக்கும் வழங்க வேண்டும். விபத்து எங்கு நடந்து இறந்தாலும் அனைத்து வாரிய உறுப்பினர்கள்களுக்கும் ரூ.5 லட்சம் நிவாரணம்வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன் தலைமைவகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன்ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம், நிர்வாகிகள் பெய்யப்பன், மதி உள்ளிட்டோர்க லந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.