உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Published On 2023-06-19 12:06 IST   |   Update On 2023-06-19 12:06:00 IST
  • ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது
  • பயிற்சியில் தா.பழூர் வட்டாரத்துக்குட்பட்ட 194 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வள மையம் மூலம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. தா.பழூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் சாந்திராணி முன்னிலை வகித்தார். தா.பழூர், காரைக்குறிச்சி, சுத்தமல்லி ஆகிய குறுவள மையங்களில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் மன்ற செயல்பாடுகள், மாணவர்களின் உடல்நலம், மனநலம், ஊட்டச்சத்து குறைபாடுகளை களைதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சியில் தா.பழூர் வட்டாரத்துக்குட்பட்ட 194 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக ஆசிரியர் பயிற்றுனர் சம்பத் வரவேற்றார். முடிவில் ஆசிரிய பயிற்றுனர் அந்தோணி தாஸ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News