உள்ளூர் செய்திகள்

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

Published On 2023-02-24 07:42 GMT   |   Update On 2023-02-24 07:42 GMT
  • பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
  • அரியலூர் மாவட்ட நீதிபதி உத்தரவு

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்ததை சார்ந்தவர் பரமசிவம் (வயது 71). இவர் 14.4.2015 அன்று மதியம் வீட்டில் இருந்தபோது இவரது சகோதரர்கள் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம் ஆகிய 3 பேரும் சென்று வீட்டை காலி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

அதற்கு பரமசிவம் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது, தீர்ப்பு வரட்டும், தீர்ப்பு வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் பரமசிவத்தை தாக்கியுள்ளனர். சண்டையை விலக்க வந்த தில்லை வள்ளாலன், ஆதிமூலம் ஆகியோரையும் உருட்டுகட்டை மற்றும் அரிவாளால் தாக்கி காயப்படுத்தி யுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் குவாகம் போலீசார் வெங்கடேசன், செல்வராஜ், செல்வம் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரனை அதிகாரியான குவாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலா செயல்பட்டார். ஜெயங்கொண்டம் குற்றவியியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டிலிருந்து மேல் விசாரணைக்காக அரியலூர் மாவட்ட கோர்ட்டிற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 11 சாட்சிகளில் 10 சாட்சிகளிடம் விசாரனை முடிவடைந்தது.

இதற்கிடையே விசாரணை அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் கலா தற்போது பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். மேற்கண்ட வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டு சம்மனை பெற்றுக்கொண்டு தொடர்ந்து அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை 6.3.2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட நீதிபதி மகாலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News