உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற சிறுவன் கைது

Published On 2022-08-14 10:05 GMT   |   Update On 2022-08-14 10:05 GMT
  • உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசாருக்கு, கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது
  • இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது, அவனிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசாருக்கு, கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மணகெதி சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் 16 வயது சிறுவன் கஞ்சா விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது, அவனிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News