- ஜெயங்கொண்டத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்த தான முகாம்
- ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.முகாமினை ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் குமணன் தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் விஜயகுமார் வரவேற்றார்.தலைவர் சுரேஷ்குமார் முன்னுரை ஆற்றினார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுமதி, போலீஸ் ஏட்டு அனிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர்கள் அன்புராஜ், செந்தில்வேல் , கிருபாநிதி, ஜெயராமன், பொருளாளர் கார்த்திகேயன்மற்றும் உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சுப்பிரமணியன், ராஜேந்திரன், ஸ்டுடியோ கார்த்திகேயன், உடையார்பாளையம் சரவணன், அடிகள் சிவபெருமான், பணிநிறைவு தலைமையாசிரியர் அரங்கநாதன், சிவராமகிருஷ்ணன், மெடிக்கல் விஜயகுமார்,மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் அரியலூர் அரசினர் ரத்த வங்கி டாக்டர் கண்மணி தலைமையில் செவிலியர்கள் உட்பட மருத்துவக் குழுவினர் 34 நன்கொடையாளர்களிடம் ரத்தம் சேகரித்தனர்.ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.முகாமுக்கான ஏற்பாடுகளை திட்ட தலைவர் பொறியாளர் அன்புராஜ், ஒருங்கிணைப்பாளர் அனந்த பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.முடிவில் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் குமணன் முகாமை தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் தலைவர் சுரேஷ்குமார்,முன்னாள் தலைவர் விஜயகுமார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் பலர் உள்ளனர்.