உள்ளூர் செய்திகள்

தா.பழூர் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-14 10:12 GMT   |   Update On 2022-08-14 10:12 GMT
  • தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
  • நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகிரா பானு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News