உள்ளூர் செய்திகள்

அரியலூர் கடைகளில் அதிரடி சோதனை

Published On 2023-07-04 06:47 GMT   |   Update On 2023-07-04 06:47 GMT
  • அரியலூரில் 106 கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது
  • சோதனையில் புகையிலை போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் 106 கடைகளில் அதிரடி சோதனை நடைபெற்றது.வி.கைகாட்டி பகுதி மற்றும் அரியலூர் தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், விற்பனை செய்த 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில் புகையிலை போன்ற போதை வஸ்துகள் விற்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் 9444042322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News