உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-11 11:05 IST   |   Update On 2023-07-11 11:05:00 IST
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

அரியலூர்,

பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அங்க ன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுப ட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாள ர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையத்தை மற்றொரு அங்க ன்வாடியுடன் இணைப்பதை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒர் ஆண்டு அளிப்பது போல, சத்துணவு ஊழியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறு த்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதேபோல் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் சகுந்தலா தலைமை வகித்தார்.

Tags:    

Similar News