உள்ளூர் செய்திகள்
- கோவிலில் அம்மன் நககைள் திருடப்பட்டுள்ளது.
- கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த உண்டியல் மற்றும் அம்மன் நகை உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தொட்டிக்குளம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து வழக்கம் போல, பூசாரி கோவிலை பூட்டிச் சென்றார். தொடர்ந்து காலை கோவிலுக்கு வந்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த உண்டியல் மற்றும் அம்மன் நகை உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.