உள்ளூர் செய்திகள்
அரியலூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
- அரியலூர் அதிமுக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்த்பட்டது.
அரியலூர்,
அரியலூர் அதிமுக அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து, அ.தி.மு.க. 51 வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியினை ஏற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் மற்றும் ஒன்றிய, நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்