உள்ளூர் செய்திகள்

அரியலுாரில் 2 1/2 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க நடவடிக்கை

Published On 2023-02-16 15:04 IST   |   Update On 2023-02-16 15:04:00 IST
  • அரியலுாரில் 2 1/2 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது
  • குடற்புழு தொற்றினால் உடல் வளர்ச்சி முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.

அரியலூர்:

குடற்புழு தொற்றினால் இரும்புச்சத்து இழப்பு, ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, விட்டமின் ஏ சத்து குறைபாடு, உடல் வளர்ச்சி முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. எனவே தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும். இந்த மாதம் குடற்புழு மாத்திரை வழங்கும் முகாம் கடந்த செவ்வாய் கிழமை முதற்கட்டமாக அரியலுார் மாவட்டத்தில் நடந்து முடிந்தது. வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள முகாமில் விடுபட்டவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். அரியலூர் மாவட்டதில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 741 பள்ளிகள் மற்றும் 774 அங்கன்வாடி மையங்கள் 15 கல்லூரிகள், 7 தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் 1 முதல் 19 வயது வரை உள்ள 2 லட்சத்து 11 ஆயிரத்து 168 பேருக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள் 54 ஆயிரத்து 465 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் 633 பேருக்கும் மாத்திரைகள் வழங்கப்படும். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் ஆகிய துறைகள் மூலம் இந்த மாத்திரைகள் வழங்கப்படும் என அரியலுார் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News