உள்ளூர் செய்திகள்

மது விற்ற வாலிபர் கைது

Published On 2023-06-26 12:05 IST   |   Update On 2023-06-26 12:05:00 IST
  • மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கயர்லாபாத் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற ஜெயராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆறுமுகம்(வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News