உள்ளூர் செய்திகள்

ரோட்டில் கிடந்த 7.5 பவுன் தங்க நெக்லஸ்

Published On 2023-03-28 06:24 GMT   |   Update On 2023-03-28 06:24 GMT
  • உரியவர்களிடம் ஒப்படைத்த போக்குவரத்து போலீசார்
  • பாராட்டி சான்றிதழ் வழங்கிய அரியலூர் மாவட்ட எஸ்.பி.

அரியலூர்,

அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள வாரணவாசி மருதையாற்று பாலம் வழியாக அரியலூர் நகர போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், ஏட்டு சந்திரமோகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒரு பை கீழே கிடந்தது. அந்த பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் 7½ பவுன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், அந்த நகையை அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் இருவரையும் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

Tags:    

Similar News