உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரதம் இருந்த முதியவர் உட்பட 7 பேர் கைது

Published On 2022-10-14 09:12 GMT   |   Update On 2022-10-14 09:12 GMT
  • உண்ணாவிரதம் இருந்த முதியவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்
  • பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் திறப்பதை கண்டித்து

அரியலூர்:

அரியலூர் அடுத்த தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா காணாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

இந்நிலையில், அந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை பள்ளிக்கே வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன் பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், இந்த ஊராட்சி அலுவலகம் நேற்று திறக்கப்படவுள்ளதாக அறிவித்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் தமிழ்மணி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

இவருக்கு ஆதரவாக முன்னாள் மாணவர் சங்க தலைவர் தமிழ்களம் இளவரசன், செயலர் நீலமேகம் மற்றும் ஆ.ராஜா, ராஜேந்திரன், வடிவேல், பாரிவள்ளல் ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்தனர்.

தகவலறிந்து வந்த அரியலூர் காவல் துறையினர், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மேற்கண்ட 7 பேரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

Similar News