உள்ளூர் செய்திகள்

கரிதூளில் கலப்படம் செய்த 7 பேர் கைது

Published On 2023-07-18 12:48 IST   |   Update On 2023-07-18 12:48:00 IST
  • அரியலூர் தனியார் ஆலைக்கு கொண்டு வரப்பட்ட கரித்தூளில் கலப்படம் செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
  • விசாரணையில் லாரியில் இருந்து ஜிபிஆர்எஸ் கருவியை கழட்டி வைத்து, கலப்படம் செய்தது தெரிய வந்தது

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் இருக்கும் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலைக்கு சென்னை துறை முகத்தில் இருந்து மணி கரி லாரியில் வருவது வழக்கம்.இந்நிலையில் அவ்வாறு ஆலைக்கு வரும் போது அதில் கலப்படம் செய்யப்பட்டதாக ஆலை மேற்பார்வையாளர் நல்லேந்திரனுக்கு தகவல் வந்தது.இதனையடுத்து அந்த லாரி வரும் வழியில் சுமார் ஒரு மணி நேரம் ஒரு இடத்தை கடக்காமல் இருந்ததும் தெரியவந்ததுஇதனையடுத்து ஆலை மேற்பார்வையாளர் நல்லேந்திரன் விக்கிரமங்கலம் பொலீசாரிடம் புகார் தெரிவித்தார்.போலீசார் விசாரணையில் காரில் ஜிபிஆர்ஏஸ் வைத்து லாரியில் வந்த மணி கரியில் ஒரு பகுதியை எடுத்து விட்டு கலப்படம் செய்தது பிறகு மீண்டும் ஜிபிஆர்ஏஸ் லாரியில் வைத்துள்ளனர்.இதனையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த செந்தில், பிரேம் சங்கர், சதீஷ்குமார், ஹரிஹரன் மற்றும் அரியலூரை சேர்ந்த சுப்ரமணி, குமார், இளையராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags:    

Similar News