உள்ளூர் செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2023-10-07 07:40 GMT   |   Update On 2023-10-07 07:40 GMT
  • ஜெயங்கொண்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
  • அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல்

 ஜெய ங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் அடுத்து நாகல் குழி குறிசாலையில் தொடர்ந்து பணம் வைத்து பலர் சீட்டு விளையாடுவதாக ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நடேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த வீரமணி, ராஜா, சுரேஷ் ,மன்னார், என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.3500 பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News