உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2022-06-11 06:51 GMT   |   Update On 2022-06-11 06:51 GMT
  • ஜெயங்கொண்டத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடமிருந்து ரொக்கம் ரூபாய் 2320 பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், சந்திரமோகன், ராஜேந்திரன், செல்வராஜ் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 108 சீட்டுக்களையும், ரொக்கம் ரூபாய் 2320 பறிமுதல் செய்து 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News