உள்ளூர் செய்திகள்

செந்துறை அருகே பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது

Published On 2023-06-23 12:28 IST   |   Update On 2023-06-23 12:28:00 IST
  • செந்துறை அருகே பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
  • காரை சோதனையிட்ட போது அதில் சைக்கிள் செயின், கம்பி பாறை மற்றும் ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராம பகுதிகளில் இரும்புலிக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீஸ் ரஜினி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் நின்றது. காரில் 5 மர்ம நபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்த போது அதில் ஒருவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.

மேலும் இவர் பல்வேறு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்றும் தெரியவந்தது. அவரைத் தொடர்ந்து மற்றவர்களை விசாரிக்க முற்படும்போது 4 பேரும் அந்த பகுதியில் இருந்து ஏரிக்குள் புகுந்து தப்பி ஓடினர். துரிதமாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கூடுதல் போலீசாரை வரவழைத்து ஏரியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த தேடுதல் வேட்டையில் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன், பெரம்பலூர் மாவட்டம் பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து காரை சோதனையிட்ட போது அதில் சைக்கிள் செயின், கம்பி பாறை மற்றும் ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆனந்தவாடி டாஸ்மாக் கடையை கொள்ளை அடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News