உள்ளூர் செய்திகள்
- வாகன விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
- தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 32,), அன்புச்செல்வன் (35) கூலித் தொழிலாளியான இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இடைக்கட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். சின்னவளையம் கிராம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதியினர் அவர்களை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.