உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு 11 ஆண்டு சிறை

Published On 2022-08-06 15:07 IST   |   Update On 2022-08-06 15:07:00 IST
  • வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
  • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்

அரியலூர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 30) இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2021-ம் ஆண்டில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் சிறுமிக்கு பாலியல தொல்லை கொடுத்ததற்காக 7 ஆண்டுகள சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததற்காக 2 ஆண்டுகள் சிறை, ரூ.2,500 அபராதம் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை, ரூ.2,500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் சிறைத்தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ராஜா ஆஜரானார்.

Tags:    

Similar News