உள்ளூர் செய்திகள்

அரிசந்திரா நாடகத்தின் ஒரு காட்சி.

மெலட்டூர், பாகவத மேளாவில் தத்ரூபமாக அரங்கேறிய அரிச்சந்திரா நாடகம்

Published On 2023-05-23 09:55 GMT   |   Update On 2023-05-23 09:55 GMT
  • ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
  • நாளை ஹரிஹரலீலா விலாசம் எனும் நாடகம் நடைபெற உள்ளது.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய நாடகம் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பாகவத மேளா நாடகவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. நேற்று 4-வதுநாள் நிகழ்ச்சியாக அரிச்சந்திரா 2-ம்பாகம் நாடகம் நடைபெற்றது.

இன்று மாலை சென்னை சுதாவிஜயகுமார் குழுவி னரின் பரதநாட்டிய நிகழ்ச்சி யும், நாளை ஹரிஹரலீலா விலாசம் எனும் நாடகமும்,

25-ந்தேதி வள்ளி திருமணம் எனும் நாட்டிய நாடகமும் நடை பெறவுள்ளது.

ஏற்பாடுகளை பாகவத மேளா நாட்டிய நாடக சங்கம் இயக்குனர் கலைமாமணி குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News