உள்ளூர் செய்திகள்

சலவை தொழிலாளியிடம் தகராறு-டிரைவர் கைது

Published On 2023-03-23 15:24 IST   |   Update On 2023-03-23 15:24:00 IST
  • துணிகளை சுத்தம் செய்ய கொடுத்துவிட்டு பின்பு அதற்கான பணத்தை ரூ.240யை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
  • இது குறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின்படி சேகரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள பீர்ஜேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது64), அவர் அதே பகுதியில் சலவை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவரது கடைக்கு வந்த டிரைவர் சேகர்(42) என்பவர் அவரது துணிகளை சுத்தம் செய்ய கொடுத்துவிட்டு பின்பு அதற்கான பணத்தை ரூ.240யை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இது குறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின்படி சேகரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News