உள்ளூர் செய்திகள்

கோவில்களில் தொல்லியல் துறையினர் ஆய்வு

Published On 2022-07-16 15:31 IST   |   Update On 2022-07-16 15:31:00 IST
  • இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பழமையான கோயில்களில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
  • ஆய்வின் போது அனுப்பூர் செல்லியம்மன் கோயில் தக்கார் சங்கர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் செயல்அலுவலர் கஸ்துாரி ஆகியோர் உடனிருந்தனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பழமையான கோயில்களில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அனுப்பூர் செல்லியம்மன் கோயிலில் பழுதடைந்த கட்டுமானப் பகுதியை பழமை மாறாமல் சீரமைப்பது குறித்த அறிக்கையும் அனுமதியும் வழங்குவது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து, வாழப்பாடியில் பழுதடைந்துள்ள அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் செல்வவிநாயகர் திருக்கோயில்களை புதுப்பிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும், இக்குழுவினர் இரு கோயில்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது அனுப்பூர் செல்லியம்மன் கோயில் தக்கார் சங்கர், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் செயல்அலுவலர் கஸ்துாரி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News