உள்ளூர் செய்திகள்

இது என்ன தள்ளு மாடல் பேருந்தா? குமுறும் பயணிகள்

Published On 2023-01-31 14:10 GMT   |   Update On 2023-01-31 14:10 GMT
  • பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
  • அடிக்கடி பயணிகளை தள்ளச் சொல்லி டிரைவர்கள் பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்குகின்றனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆரணியில் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வசதிக்காக ஆவடியில் இருந்து ஆரணிக்கு மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக இப்பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேருந்துகள் குறித்த நேரத்தில் வருவதில்லை, இரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

குறிப்பாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில பேருந்துகளின் செல்ப் மோட்டார் வேலை செய்யாததாலும், பேட்டரிகள் சரியில்லாததாலும் டிரைவர்கள் பஸ்சை குறித்த நேரத்தில் ஸ்டார்ட் செய்ய இயலவில்லை என கூறப்படுகிறது. அடிக்கடி பயணிகளை தள்ளச் சொல்லி டிரைவர்கள் பஸ்சை ஸ்டார்ட் செய்து இயக்குகின்றனர்.

ஆரணி-ஆவடி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்ய மிகவும் சிரமமாக உள்ளது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் இலவச பஸ் பயணம் என்று கூறிவிட்டு இப்படி தள்ளு மாடல் வண்டியை இயக்க வேண்டாம் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News