உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

யோகாசன போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2023-10-24 06:04 GMT   |   Update On 2023-10-24 06:04 GMT
  • தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடைபெற்றன.
  • இதில் வெற்றி மாணவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுகின்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

கம்பம்:

தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடைபெற்றன. இதில் வெற்றி மாணவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுகின்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

இந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் காந்தவாசன் மற்றும் செயலர் சுகன்யா காந்தவாசன், பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரி மற்றும் உதவி முதல்வர் லோகநாதன் மற்றும் யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன் மற்றும் ரவி ராம் ஆகியோர்களும் பாராட்டி சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கினர். 11 வயது முதல் 14 வயது வரை நின்ற நிலை பிரிவில் ரித்திக்ஷா, தன்யா, ஹாஷினி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

அமர்ந்த நிலை பிரிவில் ரூபியா, அகல்யா, தேவஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். 8 முதல் 11 வயது பிரிவில் சர்வின், சந்தோஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். பேலன்ஸ் பிரிவில் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பிரிவில் தருண், வர்ஷன், விபின் மற்றும் ஹரிஹர சுதன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

Tags:    

Similar News