search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appreciation to the students"

    • தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடைபெற்றன.
    • இதில் வெற்றி மாணவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுகின்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

    கம்பம்:

    தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடைபெற்றன. இதில் வெற்றி மாணவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுகின்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

    இந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் காந்தவாசன் மற்றும் செயலர் சுகன்யா காந்தவாசன், பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரி மற்றும் உதவி முதல்வர் லோகநாதன் மற்றும் யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன் மற்றும் ரவி ராம் ஆகியோர்களும் பாராட்டி சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கினர். 11 வயது முதல் 14 வயது வரை நின்ற நிலை பிரிவில் ரித்திக்ஷா, தன்யா, ஹாஷினி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    அமர்ந்த நிலை பிரிவில் ரூபியா, அகல்யா, தேவஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். 8 முதல் 11 வயது பிரிவில் சர்வின், சந்தோஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். பேலன்ஸ் பிரிவில் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பிரிவில் தருண், வர்ஷன், விபின் மற்றும் ஹரிஹர சுதன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசினர் ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
    • பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் இரு மாணவர்களுக்கும் தலா ரூ.2,500 வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசினர் ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் சுரேஷ்குமார், மாநில அளவிலான கபடி போட்டியிலும், மாணவர் வெங்கடேஷ், மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியிலும் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்‌ பட்டுள்ளனர். இந்த இரு மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் இரு மாணவர்களுக்கும் தலா ரூ.2,500 வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ், நிர்வாகிகள் கோபிநாத், குணாளன், ரமணி, தில்லையம்பலம், ஆசிரியர் முனிரத்தினம் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

    பெற்றோர்கள், ஆசிரியர்கள் கொடுத்து வரும் ஊக்கத்தினால், தொடர்ந்து முறையாக பயிற்சி பெற்று, மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, தேசிய அளவில் சாதனை படைப்போம் என, மாணவர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ×