உள்ளூர் செய்திகள்

தங்கம் வென்ற மாணவி சீதளாதேவிக்கு சங்க தலைவர் சோமசுந்தரம் பரிசு வழங்கினார்.

தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

Published On 2022-08-16 09:29 GMT   |   Update On 2022-08-16 09:29 GMT
  • தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவி சீதளாதேவிக்கு பாராட்டு ெதரிவித்து பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார்.
  • தேவையான உதவிகளை செய்ய அரசும், ெதாண்டு நிறுவனங்களும், வசதி படைத்தவர்களும் முன்வர வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பிரின்ஸ் லயன்ஸ் சங்கத்தினர், தஞ்சை ஈஸ்வரிநகர் பாரதியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராம் வித்யாஸ்ரமம் நர்சரி, பிரைமரி பள்ளியில் நடந்த 75-வது சுதந்திரதின விழாவில் பங்கேற்று நேபாள நாட்டில் நடந்த இண்டர்நேஷனல் தடகள 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் வென்ற தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்த மாணவி சீதளாதேவிக்கு, பதக்கம் அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார்.

சங்க தலைவர் ேசாமசுந்தரம் பல்வேறு போட்டிகளில் வென்ற ஸ்ரீராம் வித்யாஸ்ரமம் நர்சரி, பிரைமரி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.இதன் தொடர்ச்சியாக நேபாள நாட்டில் நடந்த தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவி சீதளாதேவிக்கு, பாராட்டு ெதரிவித்து, பதக்கம் அணிவித்தும், கேடயம் வழங்கியும் கவுரவித்தார். அத்துடன் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இம்மாணவியை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அடுத்தடுத்து போட்டிகளில் முன்னேறி செல்வதற்கும், மேலும் பல பதக்கங்களை வெல்லவும், வாழ்த்தியதுடன் இவருக்கு தேவையான உதவிகளை செய்ய அரசும், ெதாண்டு நிறுவனங்களும், வசதி படைத்தவர்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விழாவில் மாவட்ட நிர்வாக அலுவலர் லயன் டாக்டர் ஸ்டாலின், ஸ்ரீராம் வித்யாஸ்ரமம் பள்ளி தாளாளர் ராமதாஸ், தலைமை ஆசிரியை சாந்தி ராமதாஸ், சங்க மண்டல தலைவர் சிவக்குமார், வட்டார தலைவர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டியன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் பழனிவேல், சந்தானக்குமார், செல்லப்பன், சிவகாமி செல்லப்பன், ேமாகனப்பிரியா ஸ்டாலின் மற்றும் லயன் சுகுமார், புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துைர வழங்கினர்.

முன்னதாக சங்க செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். பொருளாளர் என்.சோமசுந்தரம் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை சக்திவேல் தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News