உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2022-07-21 07:31 GMT   |   Update On 2022-07-21 07:31 GMT
  • தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் நடந்த செஸ் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் நடந்த 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பிரிவில் திண்டுக்கல் சந்தை ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர் சந்தோஷ் முதல் இடத்தையும், ரகுவீர் 3ம் இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வருகிற 25ம் தேதி மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தினி, உடற்கல்வி ஆசிரியர் வின்னிகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News