உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி பேரூராட்சி தலைவர், துணைதலைவருக்கு பாராட்டு விழா

Published On 2022-06-24 09:29 GMT   |   Update On 2022-06-24 09:29 GMT
  • நீலகிரி அறக்கட்டளை சார்பில் ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
  • இதில் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ் பங்கேற்றார்.

அரவேணு:

நமது நீலகிரி அறக்கட்டளை சார்பில் கோத்தகிரி பேரூராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி வரவேற்றார். சோழா மகேஷ்வரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ் பங்கேற்றார்.

விழாவில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஆல்வின், சுகுணா சிவா, முருகன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத்தலைவர் உமாநாத் போஜன் மற்றும் வார்டு உறுப்பினர் சுப்ரமணி மனோஜ், மோனிஷா, பிரியா பாலன், ஜெகதீஸ்வரன், மல்லிகா ரவி, பிரபுதாஸ் கற்பகம், அமுதம் பாபு, காவேரி, ராஜேஸ்வரி, வெஸ்லி, லோகநாதன், சகுந்தலா காளிதாஸ், தாமோதரன், கணபதி, முகமது ஜாபர், செல்வராணி, பூமணி, ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதிகள் ரெப்கோ வங்கி சேர்மேன் தங்கராஜ், வங்கி இயக்குனர் பிரதிநிதிகள் ஞானபிரகாஷ், கலைச்செல்வன், சுப்பிரமணியம், லோகநாதன், கிருஷ்ணன், பாரதியார், கணேசன், ராஜா, மதிவாணன் ,ரமேஷ்குமார் பி எஸ் குமார், ஏ முருகேஷ் ஆகியோருக்கு பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News