தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம்
- கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தர் நியமிக்கப்பட்டார்.
- கோவை மாவட்டம், ஒன்றியம், பகுதிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை,
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தரை கட்சியின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் நியமித்துள்ளனர்.மேலும் கோவை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளனர்.
கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வருமாறு:-
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட தலைவராக ஜெயராஜ், மாவட்ட செயலாளராக வில்லியம் ஜோஸ், வடக்கு மாவட்ட செயலாளராக ரங்கசாமி, தெற்கு மாவட்ட தலைவராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சிறு பான்மை பிரிவு மாவட்ட செயலாளராக அக்பர் ெஷரீப், தகவல் தொழில் நுட்ப மாவட்ட செயலாளராக நித்யானந்தன், மாவட்ட இணை செயலாளராக சண்முகம், மாவட்ட பொருளாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுபோன்று கோவை மாவட்டம், ஒன்றியம், பகுதிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரின்ஸ் சுந்தருக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.