திருநங்கையருக்கான முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம்
- விருது பெற்றிருந்தால் அதன் விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும்.
- இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.
திருப்பூர் :
திருநங்கையர் தினமான ஏப்ரல் மாதம் 15-ந் தேதி 2023-ம் ஆண்டுக்கான திருநங்கையர் முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக, சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்.
குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது. இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் awards.tn.gov.in பதிவு செய்ய வேண்டும்.
வருகிற 28-ந் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பயோடேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, சுயசரிதை, அவரை பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்), விருது பெற்றிருந்தால் அதன் விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும்.
மேலும் சேவையை பாராட்டி பத்திரிகையின் செய்தி தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், போலீஸ் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை தமிழில் அச்சு செய்து 2 நகல்களை கையேட்டில் இணைத்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.36-ல் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.