உள்ளூர் செய்திகள்

சமூக நீதிக்கான பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- தென்காசி கலெக்டர் தகவல்

Published On 2022-09-23 14:25 IST   |   Update On 2022-09-23 14:25:00 IST
  • தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது
  • விருதாளர் தமிழக முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

தென்காசி:

சமூக நீதிக்காக பாடுபடு பவர்களை சிறப்பு செய்வ தற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.5 லட்சம் பரிசு

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்ப டுகிறது.


இவ்விருதாளர் தமிழக முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.


எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடைய நபர்கள் தங்களது பெயர், பிறந்த இடம், நாள், தாய்,தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி தொலைபேசி எண், கல்வி தகுதி,தொழில், சமூக நீதிக்காகப் பாடுபட்ட விவரம்,

பெரியார் கொள்கை களில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை குறித்து சிறுகுறிப்பு, கலை, இலக்கியம், சமூக பணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு போன்ற விவரங்களை உள்ளடக்கிய தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

2022-ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022 என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News