நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
- நாமக்கல் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர்.
- சேவை துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ள 62 வயதிற்குட்பட்டராக இருக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-
நாமக்கல் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு பொது பயன்பாட்டு சேவை சம்மந்தமாக பெறப்படும் மனுக்களுக்கு தீர்வுகாண நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியுடன் சேர்ந்து பணிபுரிய உறுப்பினர் ஒருவர் தேர்வுசெய்யபட இருக்கிறார்.
அவர் போக்குவரத்து சேவை துறை (பயணிகள் அல்லது பொருட்களை கொண்டு செல்வதற்கான சாலை மற்றும் போக்குவரத்து துறை), அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி சேவை துறை, மின்சாரம், ஒளி மற்றும் நீர் வழங்கல் சம்மந்தமான துறை, பொது பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, மருத்துவமனை மற்றும் மருந்தகத் துறை, காப்பீட்டு துறை, கல்வி மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள், வீடு, மனை மற்றும் நிலம் சார்ந்த துறை போன்ற பொது பயன்பாட்டு சேவை துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ள 62 வயதிற்குட்பட்டராக இருக்க வேண்டும். எனவே இந்த தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நாமக்கல் - 637001 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.