திருவாரூர் திரு,வி,க அரசு கலை கல்லூரியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தலைமையில் மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
திரு.வி.க.அரசு கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தலைைமயில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
- போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது.
திருவாரூர்:
முதலமைச்சரால் போதைப்பொருள் ஒழிப்பு திட்டமானது காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தலைைமயில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் கலெக்டர் தெரிவித்தாவது:-
முதலமைச்சர் ஆணைக்–கிணங்க போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிெமாழியானது எடுத்துக்கொள்ளப்பட்டது.
போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது.
குடும்பத்தினர், நண்ப ர்களுடன் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும். அேதபோன்று, போதைப் பழக்கத்திற்கு பங்களிப்பும் மிக முக்கியமானது.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவ ற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள ப்படும் என தெரிவித்தார்.
இதில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மண்டல இணை இயக்குநர் (உயர் கல்வித்துறை) எழிலன், உதவி ஆணையர் (கலால்) அழகிரிசாமி,
திரு.வி.க. அரசு கலை கல்லூரி முதல்வர் கீதா, ஆர்.டி.ஓ. சங்கீதா, தாசில்தார் நக்கீரன், நகர்மன்ற குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.